கொலை செய்து விட்டு சாமியாராக உருவெடுத்த நபர் - ஆந்திராவில் தட்டி தூக்கிய போலீஸ்

x

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே இளைஞர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர், ஆந்திராவில் சாமியார் வேடத்தில் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம், கருங்குளத்தைச் சேர்ந்த மணி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவருடைய கள்ளக்காதலி உள்ட 4 பேரை ஏற்கெனவே போலீசார் கைது செய்தனர். கொலையில் தொடர்புடையவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த குஜிலியம்பாறையைச் சேர்ந்த கொடியரசு என்பவர் தலைமறைவாகி விட்டதால், அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் காளகஸ்தியில் உள்ள கோவில் ஒன்றில் சாமியார் வேடத்தில் வாழ்ந்து வந்த கொடியரசுவை போலீசார் சுற்றி வளைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்