உயிரிழந்த நாயின் உடலை சுமந்து காவல் நிலையம் சென்ற நபர்- நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சிகள்

x

உயிரிழந்த நாயின் உடலை சுமந்து காவல் நிலையம் சென்ற நபர்- நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சிகள்

தனது வளர்ப்பு நாயை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய நபர் ஒருவர், உயிரிழந்த நாயின் உடலை தோளில் சுமந்து நான்கரை கிலோ மீட்டர் நடந்து சென்று காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

கேரள மாநிலம், பாலக்காட்டிலுள்ள காவசேரியைச் சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன். இவர் நாய் ஓன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு, இந்த நாயை யாரோ கத்தியால் குத்தி கொன்றுவிட்டனர். இதையடுத்து, உன்னிகிருஷ்ணன் இரவு 11 மணிக்கு தனது வளர்ப்பு நாயின் உடலை தோளில் சுமந்தபடி நான்கரை கிலோ மீட்டர் தூரத்திலுள்ள காவல் நிலையத்திற்கு சென்று நாயை கொன்ற நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார். இதனை பார்த்த பலரும் உன்னிகிருஷ்ணன் நாயை தோளில் சுமந்து செல்வதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்