பெண்ணுக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை - ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர் கைது

x

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் சுய தொழில் செய்து கணவருடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் கடந்த மாதம் 22 ஆம் தேதி, அந்த பெண்ணுக்கு செல்போனில் ஆபாசக் குறுஞ்செய்தி, அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதனையடுத்து, மன உளைச்சலுக்கு உள்ளான அப்பெண், இது குறித்து எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ்வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, ராஜேஷை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்