மாமூல் கேட்டு மறுத்ததால் ஆத்திரம் - பெண் கடை உரிமையாளிடம் அத்துமீறிய ரவுடி

x

சென்னைய ில், மாமூல் கேட்டு தர மறுத்த பெண் கடை உரிமையாளரிடம், தகாத முறையில் நடந்துகொண்ட பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கோடம்பாக்கம் பட்டீஸ்வரர் காலனியில், சூப்பர் மார்கெட் நடத்தி வருபவர் நசீமா.

இவரது கடையில் புகுந்த ரவுடி ஒருவர், மாமூல் கேட்டு நசீமாவை மிரட்டியுள்ளார். மாமூல் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த ரவுடி, நசீமாவின் துணியை பிடித்து இழுத்து தகாத முறையில் நடந்துள்ளார்.

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, ரவுடி அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதுதொடர்பான புகாரின் பேரில், சிசிடிவி காட்சி உதவியுடன் பெரும்பாக்கத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஐயப்பன் மீது, காவல்நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்