தி.நகர் டூ மாம்பலம் இனி ஈஸியா போலாம்.. நகரும் படிக்கட்டுடன் ஸ்கைவாக் மேம்பாலம் - குஷியில் சென்னை மக்கள்

x
  • தி.நகர் பேருந்து நிலையம் - மாம்பலம் ரயில் நிலையத்தை இணைக்கும் ஸ்கைவாக் மேம்பாலம் வரும் ஏப்ரல் மாதம் திறக்கப்படவுள்ளது.
  • சென்னை தி.நகரில் "ஸ்மார்ட் சிட்டி" திட்டத்தின் கீழ் மாம்பலம் ரயில் நிலையம் தியாகராய நகர் பேருந்து நிலையம் ஆகியவற்றை இணைத்து ஸ்கைவாக் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
  • 26 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த 2020 ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மேம்பாலத்தின் பணிகள், நகரும் படிக்கட்டு வசதியுடன் முடியும் தருவாயில் உள்ளது.
  • தியாகராய நகர் பேருந்து நிலையம் மற்றும் அதன் எதிர்புறம், மாம்பலம் ரயில் நிலையம் ஆகிய இடங்களின் வழியாக இந்த ஸ்கைவாக் மேம்பாலத்தை பொதுமக்கள் சென்று அடையலாம்.
  • தி.நகரில் கட்டப்பட்டு வரும் இந்த நவீன மேம்பாலத்தால் நாள்தோறும் மாம்பலம் ரயில் நிலையத்திற்கு வரும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன் அடைவார்கள்.
  • இதனால் மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்கு வெறும் 5 நிமிடங்களில் சேர முடியும்.

Next Story

மேலும் செய்திகள்