மாமல்லபுரம் கடற்கரையில் மர்ம சூட்கேஸ்.. உள்ளே வெடிகுண்டு இருக்கலாம் என திறந்து பார்த்தவர்களுக்கு ஒரு ட்விஸ்ட்

x
  • மாமல்லபுரம் கடற்கரையில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம சூட்கேஸை, போலீசார் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
  • மாமல்லபுரம் கடற்கரையில் மர்ம சூட்கேஸ் ஒன்று நீண்ட நேரமாக கிடந்துள்ளது.
  • ஒருவேளை அது வெடிகுண்டாக இருக்கலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் அந்த சூட்கேஸை கைப்பற்றினர்.
  • பின்னர் அதனை திறந்த பார்த்தப்போது, சுடிதார், புடவை, சான்றிதழ்கள் ஆகியவை இருந்துள்ளது.
  • இதன்காரணமாக அந்த சூட்கேஸ் பெண் சுற்றுலா பயணியுடையது என்பதை உறுதி செய்த போலீசார், சூட்கேஸில் இருந்த முகவரி மூலம் அந்த பெண்ணை தொடர்புகொண்டு வரவழைத்து, சூட்கேஸை அவரிடம் ஒப்படைத்தனர்.
  • பின்னர் அந்த பெண் போலீசாருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.

Next Story

மேலும் செய்திகள்