"கருப்பையுடன் தைக்கப்பட்ட காப்பர்-டி" - பிரசவத்தின் போது தவறான சிகிச்சை... பெண் கூறிய அதிர்ச்சி தகவல்

x

ராமநாதபுரம் அருகே பிரசவத்துக்காக சென்றபோது அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததாக, மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு அளித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், புல்லங்குடியைச் சேர்ந்த வைஜெயந்திமாலா என்பவருக்கு, சத்திரக்குடி அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு, அவருக்கு ரத்தப்போக்கு இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் பரிசோதித்தபோது, பிரசவத்தின்போது காப்பர்-டி கருத்தடை சாதனத்தை கருப்பையுடன் வைத்து மருத்துவர்கள் தைத்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வைஜெயந்தி மாலா, சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தனது சிசிச்சை செலவுக்கு நிவாரணம் வழங்க கோரியும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்