மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே சரமாரி கேள்வி

x

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா தொடர்பாக, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நாடாளுமன்றம் மக்களால் நிறுவப்பட்ட ஜனநாயகக் கோயில் என்றும், மாண்புமிகு ஜனாதிபதியின் அலுவலகம், நாடாளுமன்றத்தின் முதல் பகுதியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாங்கத்தின் ஆணவம் நாடாளுமன்ற அமைப்பை அழித்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறப்பதற்கான குடியரசுத் தலைவரின் உரிமையைப் பறிப்பதன் மூலம், எதை வெளிப்படுத்த விரும்புகிறீர்கள்? என்பதை 140 கோடி இந்தியர்கள் அறிய விரும்புவதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்