#BREAKING || குரூப் 2 தேர்வில் குளறுபடி - காரணம் என்ன ? புதிய தகவல் வெளியீடு

x

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2 முதன்மைத் தேர்வு குளறுபடி குறித்து புதிய தகவல் வெளியீடு.

கேள்வித்தாள் அச்சடிக்கப்பட்ட இடத்தில் நடந்த தவறுகளே குளறுபடிகளுக்கு முக்கிய காரணம் என டிஎன்பிஎஸ்சி விசாரணையில் தகவல்.

தேர்வர்களுக்குரிய பதிவெண்ணுடன் வினாத்தாள்கள் சரியாக அடுக்கப்படாமல் இருந்தது குளறுபடிக்கு காரணம் என தகவல்.

வெளி மாநிலங்களில் வினாத்தாள்கள் அச்சிடப்பட்ட நிலையில், அவற்றை அடுக்கியதில் குளறுபடி.

வினாத்தாள் அச்சிட டெண்டர் எடுத்த நிறுவனம், வேறு நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் வழங்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

டெண்டர் எடுத்த நிறுவனத்தை கருப்பு பட்டியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்.


Next Story

மேலும் செய்திகள்