"தமிழகத்துக்கு பெரும் சிக்கல்"... "மேகதாது எங்களது உரிமை; அணை கட்டுவது உறுதி.." - டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

x

மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வராக பதவி வகித்து வரும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், பெங்களூருவில் முதன்முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் துறை ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் கட்சி மக்களுக்கு அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றார். கர்நாடக மாநிலத்தில் நீண்ட நாள் நிலுவையில் உள்ள முக்கிய திட்டமான மேகதாது அணை மற்றும் மகதாயி அணை திட்டத்தை அமல்படுத்த விரைவில் டெல்லி சென்று உரிய ஒன்றிய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார். விரைவில் அனுமதி பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேகதாது அணை கட்டுவது தங்களது உரிமை- குறிக்கோள் என்றும் வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் தங்களுக்கு கிடையாது என்றும் டி.கே சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்