"என்னோட நிலம் எனக்கு வேணும்.." தன்னைத்தானே புதைத்துக் கொண்ட விவசாயி -மகாராஷ்டிராவில் நூதன போராட்டம்

x

மகாராஷடிராவில், அரசு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிலத்தை வழங்காததற்கு கண்டனம் தெரிவித்து, விவசாயி ஒருவர் தன்னைத்தானே புதைத்துக் கொண்டுள்ளார். ஜால்னா மாவட்டம் ஹெல்லாஸை சேர்ந்த விவசாயி சுனில் ஜாதவ் என்பவருக்கும், அவரது அத்தைக்கும், மாநில அரசின் திட்டத்தின் கீழ் கடந்த 2019ஆம் ஆண்டு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், தங்களுக்கு நிலம் வழங்காத‌தால், நிலம் உள்ள பகுதிக்கு சென்று குழி தோண்டி கழுத்து வரை தன்னைத்தானே புதைத்துக் கொண்டார். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை, ஒப்படைக்கும் வரை, மண்ணில் புதைந்து இருப்பதாக சுனில் ஜாதவ் எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்