மாமல்லபுரத்தில் ஜி-20 மாநாடு - பேனரில் கவனம் பெறும் வாசகம்

x

மாமல்லபுரம் வருகை தரும் ஜி-20 பிரதிநிதிகளை வரவேற்கும் வகையில், "யாதும் ஊரே.. யாவரும் கேளீர்" என்ற வாசகத்துடன் பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் ஜி-20 கல்வியாளர்கள் மாநாடு ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள், மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டு பிரதிநிதிகளை வரவேற்கும் விதமாக, "யாதும் ஊரே..யாவரும் கேளீர்" என்ற வாசகத்துடன் மாமல்லபுரத்தில் பேனர்கள் அமைக்கப்பட்டு இருப்பது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்