மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலம் - "கூவம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள தூண்களை இடிக்க முடிவு"

x
  • மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையான ஈரடுக்கு மேம்பாலத்திற்காக, கூவம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள அனைத்து தூண்களும் உறுதி தன்மை இல்லாத காரணத்தினால் இடிக்கப்பட உள்ளதாக சென்னை துறைமுக ஆணையத் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார்.
  • சென்னை துறைமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை மற்றும் காமராஜர் துறைமுகத்திலிருந்து 100 மில்லியன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
  • மேலும் 6 ஆயிரத்து 76 கோடி மதிப்பீட்டில் அமையுள்ள மதுரவாயல் - சென்னை துறைமுகம் ஈராடுக்கு உயர் மேம்பாலத்திற்கான திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக கூவம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள அனைத்து தூண்களும் உறுதி தன்மை இல்லாத காரணத்தினால் இடிக்கப்பட உள்ளதாகவும் சுனில் பாலிவால் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்