திருமணத்துக்கு செல்லும் வழியில் திடீரென வெடித்த வேன் டயர் - 3 சிறுவர்கள் பரிதாப பலி.. 20 பேர் கவலைக்கிடம்

x

மதுராந்தகம் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த படூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு சென்னையில் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெறுகிறது.


இதில் கலந்து கொள்வதற்காக, பெண் வீட்டார் ஏற்பாடு செய்திருந்த மினிவேனில் சுமார் 25 பேர் சென்னை வந்தனர்.


திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில், மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி அருகே சென்று கொண்டிருந்தபோது, டயர் வெடித்ததில், மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


இதில், ஒரு சிறுமி, 2 சிறுவர்கள் என 3 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 2 பேர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.


மற்றவர்கள், மதுராந்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்