மதுரையை சூறையாடிய சூறைக்காற்று! - கனமழையால் சரிந்த மரங்கள் |

x

மதுரையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், மரங்கள் முறிந்து விழுந்தன. மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. தல்லாகுளம், கோரிப்பாளையம், சிம்மக்கல், அண்ணாநகர், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கொட்டித்தீர்த்தது. இதனால், எக்கோ பார்க், சட்டக் கல்லூரி செல்லும் சாலையில் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. பின்னர், உடனடியாக வந்த தீயணைப்பு மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்