அதிகாரி என கூறி அங்கன்வாடிக்குள் புகுந்து குழந்தைகளின் தங்க தாயத்தை திருடிய பெண் - மதுரையில் பரபரப்பு

x
  • மதுரை, வாடிப்பட்டி அருகே அதிகாரி போல் நடித்து அங்கன்வாடியில் இருந்த குழந்தைகளிடம் நகை பறித்து சென்ற பெண்ண போலீசார் கைது செய்தனர்.
  • வாடிப்பட்டி அருகேயுள்ள அரசு அங்கன்வாடி மையத்தில், ஊட்டச்சத்து மைய அதிகாரி என தெரிவித்து பெண் ஒருவர் புகுந்துள்ளார்.
  • அப்போது, குழந்தைகளிடம் நலம் விசாரிப்பது போல், அங்கிருந்த குழந்தையிடம் 2 கிராம் தங்க தாயத்தை பெண் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், சாப்டூர் பகுதியை சேர்ந்த காவ்யா என்பவரை கைது செய்தனர்.
  • அவரிடம் இருந்து குழந்தையின் தங்க தாயத்தை பறிமுதல் செய்த போலீசார், பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்