சத்தமே இல்லாமல் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்..கோவில் உண்டியலை உடைத்து திருட்டு வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி...

x

மதுரை மாவட்ட சோழவந்தான் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர் திருடிச் செல்லும் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மேட்டு நீரோத்தான் பகுதியில் உள்ள துர்க்கையம்மன் கோயிலுக்குள், நள்ளிரவில் புகுந்த இளைஞர் ஒருவர், அங்கிருந்த உண்டியலை உடைத்து பணம் மற்றும் நகைகளை திருடி சென்றுள்ளார். இதனிடையே, இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளின் வெளியான நிலையில், மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்