+2 தேர்வில் 100-க்கு 138...514 எடுத்தும் Fail - அதிர்ச்சியில் மதுரை மாணவி

x

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவிக்கு தமிழில் நூற்றுக்கு138 மதிப்பெண் என முடிவு வந்ததால், குழப்பம் அடைந்துள்ளார்.மதுரை மாவட்டம் சூரக்குளம் பகுதியை சேர்ந்த ஆர்த்தி என்னும் மாணவி, திருமங்கலம் பிரான்சிஸ் பள்ளியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தார். நேற்று முடிவு வெளியான நிலையில் தேர்வு முடிவு பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் தமிழில் நூற்றுக்கு 138 மதிப்பெண்களும், இயற்பியலில் 71 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 92 மதிப்பெண்களும், கணிதத்தில் 56, வேதியியலில் 71 மதிப்பெண்களும் பெற்றுள்ளதாக முடிவு வெளியாகி உள்ளது. 3 பாடங்களில் அதிக மதிப்பெண் இருந்தும், பட்டியலில் தேர்ச்சி பெறவில்லை, faill என்று வந்துள்ளது. 600 க்கு 514 மதிப்பெண்கள் எடுத்துள்ளபோதும், மூன்று பாடங்களில் தோல்வி என்று வந்துள்ளதால், அடுத்து என்ன செய்வதென்றும் தெரியாமல் மாணவி தவித்து வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்