உயிர் காவு வாங்கிய ஷேர் மார்க்கெட்.. லட்சத்தில் பணத்தை இழந்த இளைஞர்.. - விரக்தியில் விபரீத முடிவு!

x
  • மதுரையில், ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்த இளைஞர், விரக்தியில் 50 தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
  • அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கு, திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.
  • கோவையில், நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஜெகதீஷ், தனது நண்பரான பிரகாஷ் என்பவரிடம் இருந்து, நிதி நிறுவனத்தில் லட்சக்கணக்கில் முதலீடு செய்தால், இரட்டிப்பாக தருவதாகக் கூறி, லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார்
  • . பணத்தை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்த நிலையில், அந்தப் பணத்தை மீட்டெடுக்க முடியாத நிலையில், ஜெகதீஷ் தவித்து வந்துள்ளார்.
  • பணம் கொடுத்த பிரகாஷ், பணத்தை திரும்பப் பெற முடியாத நிலையில், இதுதொடர்பாக காவல்நிலையைத்தில் புகார் அளித்துள்ளார்.
  • இந்த நிலையில், பணத்தை கொடுக்க முடியாமல் விரக்தியில் இருந்து வந்த ஜெகதீஷ், 50 தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
  • இதனை அறிந்த குடும்பத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகதீஷ் உயிரிழந்தார்.

Next Story

மேலும் செய்திகள்