"மதுரையில் வட மாநிலத்தவர்கள் ஆக்கிரமிப்பு" - மாவட்ட ஆட்சியரிடம் புகார்

x

மதுரையில் வட மாநிலத்தவர்களின் ஆக்கிரமிப்பால் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதாக கூறி, உதிரிபாக சில்லறை விற்பனையில் ஈடுபடும் செல்போன் ரிப்பேர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

அதில், வட மாநிலத்தவர்கள் மொத்த விற்பனை கடை வைத்து, சில்லறை விற்பனை செய்து வருவதால், செல்போன் சர்வீஸை நம்பி உள்ள, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளனர்

. எனவே, மாவட்ட ஆட்சியர் இதன் மீது நடவடிக்கை மேற்கொண்டு, சில்லறை விற்பனை செய்வதை தடுத்து நிறுத்தி முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்