8 ஆண்டுகளுக்கு பின் புகுந்த வீட்டிலிருந்து.. பிறந்த வீட்டுக்கு வந்து உயிரை மாய்த்த பெண்.. மகளும் விபரீத முடிவு

x

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, குடும்பத் தகராறு காரணமாக தாயும் மகளும் தற்கொலை செய்துகொண்டனர். கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜா - சரஸ்வதி தம்பதிக்கு யமுனா என்ற மகளும், குமரேசன் என்ற மகளும் இருந்தனர். மகள் யமுனாவுக்கும், கருத்திவீரன்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமாருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக யமுனா, கீழப்புதூரில் உள்ள தாய் வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில், யமுனாவும், அவரது தாயார் சரஸ்வதியும் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்