போலீஸ் என்று கடைக்குள் புகுந்த நபர்.. ஆளில்லா நேரத்தில் 'casual -ஆக' கைவரிசை - அதிர்ச்சி cctv காட்சி

x

மதுரையில் போலீசார் எனக்கூறி பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் கடையில் நபர் ஒருவர் பணம் திருடிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் செல்போன் கடை நடத்தி வருபவர் பாவா பக்ருதீன். இவருடைய கடைக்கு வந்த நபர் ஒருவர் தன்னை சிறை காவலர் என கூறி, தனக்கு செல்போன் கவர் வேண்டும் என கேட்டுள்ளார். இதனால், கடையில் இருந்து கவர் எடுக்க பக்ரூதின் வெளியில் சென்ற நிலையில், அந்த நபர் கடையில் இருந்து பணத்தை திருடி சென்றுள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்