"மீனாட்சி அம்மன் அருள் வேணுமா..?" - "அப்போ அக்கவுண்ட்ல பணம் அனுப்புங்க" - மதுரையை மிரட்டும் மோசடி கும்பல்

x

மதுரை கடச்சனேந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்று, அவர்களின் முகநூல் பக்கத்தில் செய்துள்ள விளம்பரம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், மதுரை மீனாட்சி அம்மனின் அருள் கிடைக்க தங்களுடைய டிரஸ்டிற்கு ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பினால், மாதந்தோறும் கோவிலில் பூஜை செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை நம்பி பல வெளிநாட்டவர்கள் பணம் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனாட்சி அம்மன் கோவில் கண்காணிப்பாளர் ஆறுமுகம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், மோசடி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்