மதுரை மீனாட்சி கோயில் உண்டியல் பணத்தை எண்ணும் போது திருடிய பெண்கள் - செக் வைத்த போலீசார்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் திருட்டில் ஈடுபட்ட இரு பெண்கள் வசமாக சிக்கியுள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் உட்பட 11 உப கோயில்களின் உண்டியல் காணிக்கை கோயில் துணை ஆணையர் முன்னிலையில் எண்ணப்பட்டது.இதில் 300 தன்னார்வலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனபாக்கியம் மற்றும் சோனியா என்ற இரு பெண்கள் காணிக்கை பணத்தை எடுத்து மறைத்து வைத்திருப்பதாக சில ஊழியர்கள் புகார் அளித்தனர். இந்நிலையில் அவர்களிடம் விசாரித்ததில் 3100 ரூபாய் ஒருவரிடமும் 3600 ரூபாய் மற்றவரிடமும் இருப்பதை கண்டுபிடித்த போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com