"மேயரின் ஹேண்ட் பேக்கை தூக்கி கொண்டு மாடிப்படியில் ஓடிய ஊழியர்" - வைரல் வீடியோ

x

"மேயரின் ஹேண்ட் பேக்கை தூக்கி கொண்டு மாடிப்படியில் ஓடிய ஊழியர்" - வைரல் வீடியோ

மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பொன் வசந்த் பதவி வகித்துவருகிறார். இவர் பதவியேற்றத்தில் இருந்து இவரது கணவரின் ஆதரவாளர்கள் மேயரின் அறையை ஆக்கிரமித்தது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் அதிநவீன குறைதீர் மைய தொடக்கவிழா நடைபெற்றது. அதில் மேயர் பங்கேற்ற நிலையில், மேயர் இந்திராணியின் ஹேண்ட்பேக்கை மாநகராட்சி ஊழியர் ஒருவர் நீண்ட நேரம் கையில் வைத்து கொண்டு நின்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மேயர் லிப்டில் பயணித்த நிலையில், அந்த ஊழியர் ஹேண்ட் பேக்கில் தூக்கிக்கொண்டு மாடிப்படிகளில் ஓடியது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்