மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர் கைது.. பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் புகார்

x

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் உளவியல் துறை பேராசியராக பணியாற்றி வரும் கருப்பையா, அங்கு பயிலும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பல்கலைகழகத்தில் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது இதனையடுத்து, மதுரை சரக டிஐஜி பொன்னியை சந்தித்து புகார் அளித்தனர். அதன் பேரில், மதுரை சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் கருப்பையாவை கைது செய்து, 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்