பொய்யான விபச்சார வழக்கில் இளம்பெண் கைதான விவகாரம்..!

x
  • குமரி மாவட்டம், மார்த்தாண்டத்தை அடுத்த பயணம் கிராமத்தைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
  • அதில், வீயனூரைச் சேர்ந்த போலீஸ் ஏட்டு ராஜ்குமார் என்ற குமாரதாசின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தபோது ஏற்பட்ட பிரச்னையால், அவர் திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும், பின்னர் பொய்யாக விபச்சார வழக்கில் தன்னை போலீசார் கைது செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
  • இதனால் தனது எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், தனக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
  • இந்த மனு நீதிபதி ஆர்.விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அந்த பெண்ணுக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்