அரசு அலுவலகத்திற்கு திடீரென தீச்சட்டி ஏந்தி வந்த மக்கள்... மதுரையில் பரபரப்பு

x
  • மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, சாமி கும்பிடுவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, தீச்சட்டி ஏந்தி வந்து கோட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
  • மறவன்குளம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவை தாங்கள் தான் நடத்துவோம் என, திமுக கிளைச் செயலாளர் காத்தவராயன் கூறியதாக தெரிகிறது.
  • இதனிடையே, காளியம்மன் கோயில் அனைத்து தரப்பினருக்கும் சொந்தமானது என்பதால், சாமி கும்பிட தங்களையும் அனுமதிக்க கோரி, மறவன்குளம் கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர், தீச்சட்டி ஏந்தி கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்