நடுரோட்டில் நடந்த பயங்கரம்... கல்லூரி மாணவர் மர்ம கும்பலால் படுகொலை... தூங்கா நகரில் பரபரப்பு

x
  • மதுரை மாவட்டம், மேலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவர், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
  • கம்பாளிப்பட்டியைச் சேர்ந்த வாசுதேவன் தனது நண்பர் பாலகண்ணனுடன் கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
  • தும்பைப்பட்டி சாலையில் 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து தகராறு செய்து, வாசுதேவனை பாட்டிலால் குத்தி விட்டு தப்பியோடிவிட்டது.
  • இதில், பலத்த காயமடைந்த வாசுதேவன், மேலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
  • அவருடைய உடலை உடற்கூறு ஆய்வுக்கு போலீசார் மதுரைக்கு கொண்டு செல்ல முயன்றபோது, கொலையாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்