சித்திரை திருவிழா கோலாகலம் - தங்க பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார் கள்ளழகர்

x

வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக தங்க பல்லக்கில் கண்டாங்கி பட்டுடுத்தி கள்ளர் வேடம் பூண்டு சுந்தரராஜ பெருமாள் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.

கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக மூன்று மாவடியை சென்றடையும் கள்ளழகர் 480 மண்டப படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

கள்ளர் வேடம் பூண்டு மதுரை சென்ற சுந்தரராஜ பெருமாளை பக்தர்கள் கண்ணார கண்டு ரசித்தனர். இந்த நிகழ்ச்சிக்காக மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட மூன்று மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்