டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆவின் பெண் ஊழியர் பால் பண்ணை மாடியிலிருந்து குதித்ததால் அதிர்ச்சி - மதுரையில் பரபரப்பு

x
  • மதுரை ஆவினில் வேலைவாய்ப்பு மூலமாக கடந்த 2021ஆம் ஆண்டு 47 பேர் பணியில் சேர்ந்துள்ளனர்.
  • இந்த 47 பேரும் கடந்த ஜனவரி மாதம் முறைகேடு செய்ததாக, முன் அறிவிப்பு இன்றி ஆவின் நிர்வாகம் பணிநீக்கம் செய்தது.
  • இதற்கு உயர்நீதிமன்றம் தடையாணை பிறப்பித்த நிலையிலும், இதுவரை பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பணி தொடர்பான அறிவிப்பு இல்லாததால், ஊழியர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
  • இந்த நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர் மகாலட்சுமி என்பவர், கடிதம் எழுதிவிட்டு, விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
  • பின்னர் ஆவின் பால்பண்ணை மாடியில் இருந்து குதித்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
  • அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  • இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்காண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்