பாண்டிய மன்னன் பெயரில் தேசிய கவுன்சில்.. மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

x
  • பாண்டிய மன்ன‌ன் பெயரில் தேசிய தமிழ் வளர்ச்சி கவுன்சில் அமைக்க‌க் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழ் மொழி வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்த போதும், அது நடைமுறைக்கு வரவில்லை என கூறப்பட்டுள்ளது.
  • பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தரபாண்டியன் பெயரில் தேசிய தமிழ் வளர்ச்சி கவுன்சில் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
  • இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, நான்கு வாரங்க்ளில் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

Next Story

மேலும் செய்திகள்