"வெஜ் பிரியாணில இது எப்படியா வந்துச்சு" ஹோட்டலில் சைவ பிரியருக்கு காத்திருந்த ஷாக்..!

x

மத்தியப்பிரதேசத்தில் வெஜ் பிரியாணியில் எலும்புத் துண்டுகள் இருந்த‌தால், வாடிக்கையாளர் ஒருவர் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டார். இந்தூரில் உள்ள உணவகம் ஒன்றில் ஆகாஷ் துபே என்ற சைவ பிரியர், வெஜ் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, எலும்புத் துண்டுகள் அவரது கையில் சிக்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆகாஷ் துபே, கடை ஊழியர்களுடன் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டார். அவரிடம் உணவக நிர்வாகம் மன்னிப்பு கோரியது. அதே நேரத்தில், ஆகாஷ் துபே அளித்த புகாரின் அடிப்படையில், உணவகம் மீது வழக்கப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்