மாதவன் மகன் பற்றி கேள்வி- "யாருடனும் எனது மகனை ஒப்பிட வேண்டாம்"- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பளீச் பதில்

x
  • தனது மகனின் சொந்த விஷயங்களை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  • கண்ணை நம்பாதே பட நேர்காணலின்போது, அவரது மகன் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், 18 வயதான தனது மகன், அவரது தோழியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்ததாகவும், இது அவரது சொந்த விஷயம் எனவும், இதில் தலையிட எங்களது குடும்பத்தாரை தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை எனவும் தெரிவித்தார்.
  • மேலும், தங்களது மகனுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாகவும், இதனை கேலி செய்வதை பெரிதாக எடுத்துக் கொண்டால் வாழ்க்கையை நகர்த்த முடியாது எனவும் 18 வயது சிறுவனுக்கான சுதந்திரத்தை கொடுக்க வேண்டும் என்பதையே தனது மனைவி கிருத்திகா வலியுறுத்தியதாகவும் உதயநிதி தெளிவுப்படுத்தினார்.
  • நடிகர் மாதவனின் மகன் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பது குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், தனது மகனை யாருடனும் ஒப்பிட வேண்டாம் என பதிலளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்