பைக் மீது மோதிய சொகுசு கார்...12 கி மீ சேஸ் செய்து விரட்டி பிடித்த போலீஸ் - பரபரப்பு சிசிடிவி காட்சி

x

கொடைக்கானலில் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் தப்பிய ராணுவ வீரர் உள்ளிட்ட 7 நபர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அண்ணாசாலை பகுதியில் முன்னே சென்ற இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதியது. இதில், உசிலம்பட்டியை சேர்ந்த 2 இளைஞர் படுகாயம் அடைந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றது. பின்னர், அதிவேகமாக சென்ற காரை 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெருமாள் ம‌லை வனத்துறை சோத‌னை சாவடியில் போலீசார் மடக்கி பிடித்தனர். இதையடுத்த, காரை பறிமுதல் செய்து , 7 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்