தமிழகத்துக்கே அல்வா கொடுத்த “சொகுசு கார்“ சீட்டிங் பாபு சிக்கினார்..!

x

தமிழகத்தில் சொகுசு கார்களை வாடகைக்கு எடுப்பதாக கூறி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வந்த சீட்டிங் பாபுவை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் குயவன்பாளையத்தை சேர்ந்தவர் பாபு. இவர் தமிழகம் முழுவதும் பல இடங்களில் சொகுசு கார்கள் வைத்திருப்பவர்களை தொடர்பு கொண்டு, காரை வாடகைக்கு எடுத்து கொள்வதாகவும், மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை வாடகை தருவதாகவும் கூறி ஏமாற்றி வந்தார். இதனால் சீட்டிங் பாபு என அழைக்கப்பட்டு வந்த இவர், ஆற்காடு, அண்ணாநகரை சேர்ந்த பிரேம் குமார் என்பவரின் காரை இதேபோல் பெற்று தலைமறைவாகியுள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில், தலைமறைவான சீட்டிங் பாபுவை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்