சந்திர கிரகணம்... மூடாமல் திறந்தே இருந்த திருநள்ளாறு,காளஹஸ்தி கோவில்கள்..! - காரணம் என்ன..? வெளியான சுவாரஸ்ய தகவல்

x

சந்திர கிரகணம்... மூடாமல் திறந்தே இருந்த திருநள்ளாறு,காளஹஸ்தி கோவில்கள்..! - காரணம் என்ன..? வெளியான சுவாரஸ்ய தகவல்

சந்திர கிரகண நேரத்திலும் பிரசித்தி பெற்ற காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற்றன.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சந்திரகிரகணத்திலும் நடை திறக்கப்பட்டதற்கு மிக முக்கிய காரணம் இக்கோயிலுக்கு கிரகண தோஷம் கிடையாது என்பது ஐதீகம். சந்திரகிரகணம் முடிந்த

பின்பு கோயிலில் இருந்து அஸ்திர தேவர்

பிரம்ம தீர்த்த குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் மூலவர் தர்பார்னேஸ்வரர், சனீஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு கிரகண

கால அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.


Next Story

மேலும் செய்திகள்