அக்காவுக்கு 'லவ் டார்ச்சர்'... தம்பி செய்த செயல்... ஆவடியில் பரபரப்பு

x

இளம்பெண் ஒருவருக்கு லவ் டார்ச்சர் கொடுத்த நபர் மீது தாக்குதல் நடத்தியதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவடி பகுதியில் வசித்து வரும் 19 வயது பெண் ஒருவருக்கு, மணிகண்டன் என்ற நபர் தொடர்ச்சியாக லவ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி, ஆவடி பேருந்து நிலையம் அருகே, அப்பெண்ணிடம் மணிகண்டன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, அப்பெண் தன் தம்பியை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்துள்ளார். விவரமறிந்த அப்பெண்ணின் தம்பி, தனது இரண்டு நண்பர்களுடன் வந்து மணிகண்டனை கத்தியால் குத்தியுள்ளார். அருகிலிருந்தவர்கள், மணிகண்டனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் தாக்குதல் நடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாகவுள்ள அப்பெண்ணின் தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்