பிப்.14-ல் மாணவிக்கு ப்ரொபோஸ் செய்த கிப்ட் கடை ரோமியோவுக்கு போலீஸ் தந்த வாழ்க்கையில் மறக்க முடியாத பரிசு

x
  • காதலர் தினத்தன்று காதலை நிராகரித்த கல்லூரி மாணவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கிப்ட் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
  • கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பேருந்து நிலையத்தில் கிப்ட் கடை நடத்தி வருபவர் ரிஷிபன்.
  • இவர் கல்லூரி செல்வதற்காக பேருந்து நிலையம் வரும் மாணவி ஒருவரை தினமும் நோட்டமிட்டு வந்துள்ளார்.
  • இந்நிலையில், காதலர் தினமான கடந்த செவ்வாய் கிழமையன்று பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த மாணவியிடம் ரிஷிபன் தன் காதலை தெரிவித்துள்ளார்.
  • இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி காதலை நிராகரித்த நிலையில், ஆத்திரமடைந்த ரிஷிபன் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இது குறித்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், தலைமறைவாக இருந்த ரிஷிபனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்