காதலனை கரம் பிடித்த காதலி.. அடியாட்களுடன் வீடு புகுந்து குண்டுக்கட்டாக மகளை தூக்கி சென்ற பெற்றோர்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

x

தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே கொட்டாகுளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் வினித் என்பவர், சென்னையில் மென்பொருள் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

அதேபகுதியை சேர்ந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த நவீன் படேல் என்பவர், தென்காசி பகுதியில் 20 ஆண்டுகளாக மரக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் கிருத்திகாவும், வினித்தும் பள்ளி பருவம் முதல் ஒன்றாக படித்து வரும்போதே ஒருவருக்கொருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களின் காதலுக்கு, பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்கமாட்டார்கள் என தெரியவந்ததால், இருவரும்

கடந்த டிசம்பர் மாதம், நாகர்கோவில் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர்.

இதனிடையே, கடந்த பொங்கல் அன்று, இந்த தம்பதி, கோயிலுக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பும் போது, அவர்களது காரை பெண் வீட்டார் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக புகார் அளித்தும், காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், தென்காசி குத்துக்கல்வலசை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில், வினித், தனது மனைவி கிருத்திகா மற்றும் பெற்றோருடன் இருந்துள்ளார். அப்போது அங்கு அடியாட்களுடன் வந்த பெண் வீட்டார், வினித் மற்றும் அவரது பெற்றோரை சரமாரியாக தாக்கியதுடன், கார்களை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது.

மேலும் கிருத்திகாவை அடித்தும், வலுக்கட்டாயமாக அவரை தூக்கியும் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்