ஆசை ஆசையாக காதல் திருமணம்.. கடைசில இப்படி ஆகிடுச்சே - சுப்பிரமணியாபுரம் சுவாதி கண்ணில் ஈரமா?

x

சுப்பிரமணியபுரம், வடகறி போன்ற படங்களில் நடித்த நடிகை சுவாதி, தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

சுப்பிரமணியபுரம் படம் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமான நடிகை சுவாதி, முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். கண்கள் இரண்டால் பாடலும், சுவாதியின் சிங்கப்பல்லும் அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.

சசிகுமார் இயக்கத்தில் சுப்பிரமணியபுரம் படம் பெரும் ஹிட் அடிக்க அவருடன் போராளி என்ற படத்திலும் நடித்திருந்தார்.

அடுத்தடுத்த படங்கள் பெரும் வரவேற்பை பெறவில்லை என்றாலும், ரசிகர்கள் மத்தியில் சுவாதி மீதான அன்பு குறைய வில்லை.

இதன் பின் வடகறி, யட்சன், யாக்கை, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்து கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தார் சுவாதி. ஆனால் தமிழை விட தெலுங்கு திரையுலகில் கொடிக்கட்டி பறந்தவர் சுவாதி. அதே போல் மலையாளத் திரையுலகிலும் அவர் பிரபலமானவர்.

நடிப்பில் பிசியாக இருந்த சுவாதி கேரளாவை சேர்ந்த விகாஸ் வாசுவை காதலித்து வந்தார். 2018ம் ஆண்டு விகாஸ் வாசுவை குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

சுவாதியின் கணவர் விகாஸ் விசு பைலட். அதுவும் இந்தோனேஷியாவில் பணியாற்றுகிறார். இதனால் திருமணத்திற்கு பிறகு தாய் நாட்டை விட்டு கணவருடன் இந்தோனேஷியாவிற்கு பறந்தார்.

பின்னர் 2019ல் மலையாளத்தில் thirussur pooram என்ற மலையாள படத்தில் நடித்தார். இதன் பின் திரைத்துறையில் பெரிதும் முகம் காட்டாத சுவாதி, 2020ம் ஆண்டு திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கினார்.

புகைப்படங்களை தற்காலிகமாகவே நீக்கியதாக விளக்கமும் அளித்தார். இதன்பின் தெலுங்கில் பஞ்சதந்திரம் என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்த அவர், அடுத்தடுத்து படங்களில் பிசியாகவுள்ளார்.

இந்நிலையில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள், திருமண புகைப்படங்களை மீண்டும் நீக்கியுள்ளார். இதனால் தனது காதல் கணவரை சுவாதி பிரியப்போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நீண்ட நாட்கள் கழித்து எந்த வித விளக்கமுமின்றி புகைப்படங்களை நீக்கியுள்ளதால் சுவாதியும், விகாஸும் விவாகரத்து பெறப்போவதாகவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

இதற்கு தற்போது வரை நடிகையின் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்