திருமணம் செய்த அடுத்த நொடி காணாமல் போன காதல் மனைவி - விபரீதத்தில் இறங்கிய காதலன்

x

காதல் மனைவியை காணவில் லை என்று கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், மின்னாம்பள்ளி பகுதியை சேர்ந்த ராகதேவன் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார்.

அதனை தடுத்து நிறுத்திய போலீசார் ராகதேவனிடம் விசாரணை நடத்திநர்.

அப்போது ராகதேவன் சென்னையைச் சேர்ந்த 21 வயதுப் பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதாகவும் அதனை அறிந்து வந்த பெண்ணின் பெற்றோர், சென்னையில் திருமண மண்டபத்தில் வைத்து முறையாக திருமணம் செய்து வைப்பதாகக் கூறி பெண்ணை அழைத்துச் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

காதல் பட பாணியில் மனைவியை பிரித்துச் சென்றுவிட்டதால் காதலன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்