ஆசிரியருக்கும் +2 மாணவிக்கும் காதல்... தண்டவாளத்தில் சின்னாபின்னமாக கிடந்த உடல்

x

பாசூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்த 31 வயதான கார்த்திக்கும், அவரது வகுப்பில் பயின்று வந்த மாணவியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவியும், ஆசிரியரும் வேறு வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களது காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்ததையடுத்து அவர்கள் ஆசிரியர் கார்த்திக்கை அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஞாயிறன்று இரவு தனது அலைபேசிக்கு வந்த அழைப்பை தொடர்ந்து ஆசிரியர் கார்த்திக் வீட்டை விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. மீண்டும் கார்த்திக் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர். உறவினர்களும் போலீசாரும் கார்த்திக்கை தேடி வந்தனர். இந்த நிலையில் உடல் வெட்டப்பட்ட நிலையிலும், ரயில் சக்கரத்தில் சிக்கி சின்னாபின்னமான நிலையிலும் கார்த்திக் கின் சடலம் கொடுமுடி ரயில் தண்டவாளத்தில் கைப்பற்றப்பட்டது. ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதை அறிந்த கார்த்திக்கின் உறவினர்கள் ஈரோடு அரசு அரசு மருத்துவமனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்