காதல் தோல்வியால் ஊர்க்காவல் படை வீரர் எடுத்த விபரீத முடிவு... அதிர்ச்சியில் இறந்த உறவினர்

x

காதல் தோல்வியால் ஊர்க்காவல் படை வீரர் எடுத்த விபரீத முடிவு...அதிர்ச்சியில் இறந்த உறவினர் - மீளாத் துயரத்தில் குடும்பம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே, காதல் தோல்வியால் ஊர்க்காவல் படை வீரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதிர்ச்சியில் உறவினரும் நெஞ்சுவலியால் உயிழந்த சம்பவம், குடும்பத்தார் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செட்டிகுளம் கிழக்கு தெருவை சேர்ந்த தினேஷ் என்பவர், பெண் ஒருவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

ஆனால் அந்தப் பெண் தினேசை காதலிக்கவில்லை என்று கூறியதாலும், காவலர் தேர்வில் சரியாக தேர்வு எழுதாததாலும், மனவேதனையில் தினேஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினேஷ் இறந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் சித்தப்பா மகன் வெங்கடேசும், நெஞ்சுவழியால் உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்