திருமணமான 15 நாளில் காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு ..!

x

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஜய்யும், உசிலம்பட்டியை சேர்ந்த பரமசிவன் மகள் கலையரசியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரது குடும்பமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 15 தினங்களுக்கு முன்பு விஜயும் கலையரசியும் திருப்பரங்குன்றத்திற்கு சென்று கோவிலில் திருமணம் செய்துக்கொண்டனர். இதையறிந்த இரு குடும்பத்தினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் புதுமணத்தம்பதிகள் ராஜபாளையம் வந்தபோது, கலையரசியின் அப்பா மற்றும் உறவினர்கள் இருவரையும் தாக்கியுள்ளனர். இதனால் இருவரும் மீண்டும் ஊரை விட்டு வெளியே சென்றுள்ளனர். தங்களால் சேர்ந்து வாழ முடியாது, எங்களை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் துறைக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு இருவரும் தற்கொலைக்கு முயன்றனர். உடனடியாக உறவினர்கள் இருவரையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்