கொலை மிரட்டல் விடுத்த பெண் வீட்டார் - எஸ்.பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

x

காதல் திருமணம் செய்துக்கொண்ட புதுமணத்தம்பதி, வேலூர் எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.வேலூரைச் சேர்ந்த ஷோபனா அரவிந்தகுமார் ஆகிய இருவரும் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் இவர்களின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. ஷோபனாவின் உறவினர்கள் அரவிந்த் குமாரை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.கொலை மிரட்டல் விடுக்கும் பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்