பாலியல் உறவில் ஈடுபட.. பேசிய தொகையை விட அதிகம் கேட்ட திருநங்கை - கழுத்தை நெரித்துக் கொன்ற லாரி ஓட்டுனர்

x
  • சென்னை மாதவரத்தில், பாலியல் உறவில் ஈடுபட, பேசிய தொகையை விட அதிகம் பணம் கேட்ட திருநங்கையை, கழுத்தை நெரித்துக் கொன்ற லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
  • மாதவரம் அடுத்த மாத்தூர் 200 அடி சாலையின் ஓரத்தில், திருநங்கை ஒருவர், இரண்டு கைகளையும் கயிற்றால் கட்டி வைக்கப்பட்டு, முகத்தில் ரத்த காயத்துடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.
  • தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • இதுதொடர்பான விசாரணையில், உயிரிழந்த திருநங்கை 29 வயதான சனா என தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து
  • போலீசார் நடத்திய விசாரணையில், திருநங்கையை கொலை செய்து விட்டு தப்பியோடிய நபர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கணேசன் என தெரியவந்தது.
  • பின்னர், அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
  • அதில், கனரக வாகனங்கள் நிற்கும் இடத்தில், கணேசனை பாலியல் உறவில் ஈடுபட சனா அழைத்துள்ளார்.
  • பின்னர், கூறிய தொகையை விட பல மடங்கு கேட்டு மிரட்டியதால், ஆத்திரமடைந்த கணேசன் சனாவை கழுத்தை நெரித்துக் கொன்றதாக விசாரணையில் தெரியவந்தது.

Next Story

மேலும் செய்திகள்