பட்ட பகலில் நடந்த பயங்கரம், இருவர் ஓட ஓட வெட்டிக் கொலை...

x

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூர் பகுதியில் ஸ்ரீ பாலாஜி என்ற தனியார் லாரி பழுது பார்க்கும் நிலையம் செயல்பட்டு வருகின்றது.

இங்கு லாரியை பழுது பார்ப்பதற்காக திருத்தணியை சேர்ந்த நிர்மல் என்ற லாரி ஓட்டுநர், தனது லாரியை எடுத்து வந்துள்ளார்.

லாரியை நிறுத்திய போது, அதனை சிறிது தூரம் தள்ளி நிறுத்த வேண்டுமென அதே பகுதியை சேர்ந்த குழந்தைவேலு மற்றும் சரவணன் ஆகிய இருவரும் கூறியதால் இருதரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட மோதலில் கோபமடைந்த நிர்மல் குழந்தைவேலு, மற்றும் சரவணன் ஆகியோரை சாலையில் ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளார். இதில் குழந்தைவேலு மற்றும் சரவணன் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக அந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு வாலாஜாபேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நிர்மலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்