நீண்ட நேர மின் தடையால் திருடர்களுக்கு அடித்த ஜாக்பாட்

x

செங்கல்பட்டில் நேற்று இரவு மின் தடையின் போது, அடுத்தடுத்து ஏழு கடைகளில் திருடர்கள் பூட்டை உடைத்து பொருள்களை திருடிச் சென்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம், புதுப்பட்டிணம் பகுதியில் மருந்து கடை, துணிக்கடை, மளிகைக் கடை உள்ளிட்ட கடைகளில் நேற்று இரவு இரண்டு திருடர்கள் பொருள் மற்றும் பணத்தை திருடியுள்ளனர்.

கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு நீண்ட நேரம் மின் தடை ஏற்பட்டது.

இதனை சாதகமாகப் பயன்படுத்திய திருடர்கள் ஏழு கடைகளில் திருடியுள்ளனர்.

இதில் துணிக்கடை ஒன்றில் திருடர்கள் திருடும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்