லோகேஷ் கனகராஜின் இணை இயக்குநர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்..! கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றினாரா..?

x
  • இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குநராக உள்ளவரும், பிரபல பாடலாசிரியருமான விஷ்ணு இடவன் மீது இளம்பெண் ஒருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குநராக உள்ளவர், விக்ரம் படத்தில் நாயகன் மீண்டும் வர்றார் உள்ளிட்ட 2 பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் விஷ்ணு இடவன்.
  • இவர் மீது இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். விஷ்ணு இடவனை காதலித்து வந்த நிலையில் நெருங்கி பழகியதில் அந்த பெண் கருவுற்றதாக கூறப்படுகிறது.
  • இதையறிந்த இரு வீட்டாரும் பஞ்சாயத்து பேசி நொளம்பூரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்க வைத்துள்ளனர்.
  • அப்போது அந்த பெண்ணை விஷ்ணு இடவன் திருமணம் செய்து கொள்வதாக கூறியதாகவும், தற்போது திருமணம் செய்ய மறுத்து தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது
  • . இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் விஷ்ணு இடவனை விசாரணைக்கு அழைத்தனர்.
  • இதன்பேரில் நேரில் ஆஜரான அவரிடம் விசாரணை நடந்தது.
  • மேலும் இரு தரப்பிலும் விசாரணை நடந்து வரும் நிலையில் வழக்கானது வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்